தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிழக்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஏ சி பாவரசு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தால் இயற்கை எய்தினார்.
இதன் காரணமாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் ஒரு வார காலம் துக்க நாள் அனுசரிக்க வேண்டுமென அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சிறுத்தை முருகவேல் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஏ சி பாவரசு திருவுருவப்படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில்
மாநில விவசாய அணி வேலு சிவகுமார் மாவட்ட செயலாளர் சிறுத்தை முருகவேல் சையிது இப்ராகிம் ஜெய் பீம் அழகர் திருமறகு சிறுத்தை சிரஞ்சீவி வளவன் வினோத் நந்தகுமார் காளிதாஸ் கார்த்தி மற்றும் 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.