கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு நரக பொறுப்பாளர் சலாவுதீன் அமீது தலைமையில் அதிமுகவினர்டிஜிடல் முறையில் , தேர்தல் பிரசாரம் நடைபெற்றது
கடந்த அண்ணா திமுக ஆட்சியிலும்,தற்போது உள்ள திமுக ஆட்சியிலும் உள்ள வித்தியாசத்தை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


முன்னாள் முதல்வர் எடப்பாடியார் ஆணைப்படி முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி கொண்டாடவும் தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி ஆலோசனைக்கிணங்க நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வால்பாறையில் உள்ள பூக்கடை, டீக்கடை,ஆட்டோ ஸ்டேட்,மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் பேருந்து நிலையம் போன்ற இடங்களில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது

விலைகள் உயர்ந்தும் சொத்து வரி உயர்வு, மளிகை பொருட்கள் உயர்வு, அடிப்படை பொருட்கள் உயர்வு போன்றவைகளை எடுத்து சொல்லி சுமார் 4 லட்சம் முதல் 7 லட்சம் வரை ஒரு குடும்பத்திற்கு இழப்பு ஏற்பட்டது உள்ளது என்பதை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இந்நிகழ்வில்மாநில தேயிலை தோட்ட பிரிவு தலைவர் வால்பாறை வீ. அமீது, தேர்தல் பொறுப்பாளர் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர்,நகர அவை தலைவர் சுடர் பாலு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நரசப்பன், 17 வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன், நகர அம்மா நகர பேரவை செயலாளர் செந்தில் பாலு,இளம் பெண்கள் பாசறை செயலாளர் ரா.லோகேஸ்வரன் சாய் கிருஷ்ணா, வார்டு செயலாளர்கள்
ஆட்டோ ஸ்டேண்ட் லோகேஷ் வார்டு செயலாளர் ஜான் பிட்டர்,சினிராஜ்,வார்டு செயலாளர் எம்.ஆர்.எஸ்.மோகன் வார்டு செயலாளர், கண்ணன் கார் ஓட்டுநர் சங்கம் தலைவர் சந்தோஷ் சீனி ராஜ், கார் ஓட்டுநர் செயலர் பாபு, முத்து முடி பாலன், கிருஷ்ணா கண்ணன், சு. கருணாகரன், வாழை தோட்டம், இமானுவேல், வார்டு செயலாளர் பிரேமேஷ், பாரத் ஜீவா,டவுன் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *