பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே புதுப்படையூர் கிராமத்தில் ஸ்ரீ பொய்யாப்பிள்ளையார் ஸ்ரீ தங்க விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா….
திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் …..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே புதுப்படையூர் கிராமத்தில் எழுந்தருளிள்ள ஸ்ரீ பொய்யாப்பிள்ளையார் ஸ்ரீ தங்க விநாயகர் ஸ்ரீ படைகாத்த மாரியம்மன் ,திரௌபதி அம்மன் ,பிடாரி அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைப்பெற்று யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து சென்டி மேள தலங்கள் வாத்தியங்கள், முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்-அதனை தொடர்ந்து கோவில் ஸ்ரீ பொய்யாப் பிள்ளையார் கோவிலின் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது .
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
விழாவின் ஏற்பாடுகளை புதுப்படையூர் கிராமவாசிகள், நாட்டாமைகள் ஆகியோர் செய்திருந்தனர்.