சத்தியமங்கலம் செப்.13 சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கொமாரபாளையம் பகுதியில் பாத்திமா பீபி தர்கா 50 ஆவது சந்தன உரூஸ் விழா அஹ்லே தக்கனி சுன்னத் ஜமாத் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இரவு 7 மணிக்கு சந்தன உ ரூஸ் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பல் சமய நல்லுறவு மாநிலத் தலைவர் முகமது ரஃபி தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் இறையன் பன் குத்தூஸ் ஆகியோர் கலந்து கொண்டார்.
இவ்விழா பாத்திமா பீவி தர்கா கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு கந்தூரி என்னும் தாவத் விருந்து வழங்கப்பட்டது இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மதநல்லிணக்க போற்றும் வகையில் விழாவில் சிறப்பித்தனர்.