கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களிடம், குறை தீர் மனு வாங்கும் நிகழ்ச்சி ஜெயக்குமார் தலைமையில்,கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் (பெட்டிஷன் மேளா )பொது மக்களிடம், குறை தீர் மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் IPS அவர்களிடம் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் பெட்டிஷன் மேளாவில் கலந்து கொண்டனர்.