புதுச்சேரி அரசு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 18.5 கோடி மதிப்பீட்டில் HT உயர் மின் புதைவிடப் பாதை பணி (UG Cable) நேதாஜிநகர்,
வாணரப்பேட்டை, மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
அனிபால் கென்னடி அவர்கள் பூமி பூஜை தொடங்கி வைத்தார். உப்பளம் தொகுதியில் பெரும்பாலான இடங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படும் காரணத்தினால் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் தடையில்லா மின்சாரம் கிடைத்திட ஆவணம் செய்யும்படி கேட்டிருந்தனர். இதனை அரசிடம் முறையாக அணுகி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உயர் மின் புதைவிட பாதை பணி சட்டமன்ற உறுப்பினர் முயற்சியால் போடப்பட்டது. இதனால் இயற்கை சீற்ற காலங்களில் மின்வெட்டு ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும் என்பது சிறப்பம்சமாகும்.
உடன் மின்துறை செயற்பொறியாளர்
திரு.கனியமுதன் ,
உதவி செயற்பொறியாளர் திரு.கண்ணன் மற்றும் இளநிலை பொறியாளர் திரு.சுரேஷ்
ஸ்மார்ட் சிட்டி மேலாளர் திரு.சுப்பராயலு , தொகுதி செயலாளர் சக்திவேல், மீனவர் அணி விநாயகம், ரகுமான் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *