மன்னார்குடி.,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பங்குனி உற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழாவில் வெள்ளி ஹம்ச வாகனத்தில் இராஜ அலங்கார சேவையில் ராஜகோபால சுவாமி வீதியுலா நேற்று இரவு நடைபெற்றது யானை வாகன மண்டபத்தில் தொடங்கிய சுவாமி வீதியுலா பந்தலடி, கோயில் நான்கு வீதிகள் வழியாக நடைபெற்று நள்ளிரவு நிறைவடைந்தது.
வெள்ளி ஹம்ச வாகனத்தில் நாயக்கர் அலங்கார சேவையில் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளிய ராஜகோபாலனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக வானவேடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றது .