தஞ்சாவூர்

பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டால் மாட்டு வண்டியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள்

சாதிவாரி கணக்கெடுப்பு அரசாணையை வெளியிட வலியுறுத்தியும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு போதை பொருட்களையும் தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் அரசியல் காழ் புணர்ச்சியோடு தவெக அவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் ஜனநாயக முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழக வெற்றி கழகம் சார்பில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வருகை தந்த திருவையாறு பகுதியை சேர்ந்த தவெக கட்சித் தொண்டர்கள் பெட்ரோல் டீசல் விலை தட்டுப்பாட்டால் மாட்டு வண்டியை எடுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர் ஒரு சிலர் சைக்கிளில் ஆர்பாட்டத்திற்கு வந்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *