செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக
திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுராந்தகம் பகுதியில் சிறுமிக்கு கூட்டு பாலியல் விவகாரம், கர்ப்பிணி பெண் கார் மோதி பலியான சம்பவம்,இது போன்று பெண்களுக்கு எதிரான நடைபெறும் அநீதிகளை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து மதுராந்தகம் தேரடி தெருவில்
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மாவட்டத் தலைவர் டாக்டர் பிரவீன்குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க மாவட்ட பொருளாளர் எம்.உமாபதி, மதுராந்தகம் நகர செயலாளர் ஜி.ரமேஷ்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை உட்பட NDA கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.