தருமபுரி – மார்ச் 14
தருமபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் சுமார் 29 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.255 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும்,
மேலும் ரூ.15.39 கோடி மதிப்பிலான 33 முடிவுற்ற திட்ட பணிகளை துவைக்கி வைத்தும், ரூ.33.96 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர் .கே. பன்னீர்செல்வம், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.