மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் பொதக்குடியில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு .
கூத்தாநல்லூர்., மார்ச் 14
ரமலான் மாதம் நோன்பு வைத்து பல்வேறு மத நல்லிணக்க நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்வில் நடத்துவதும்.
மதம் பார்க்காமல் சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது என இம்மாதம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளான ரமலான் நோன்பு என்பது மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில்.
அனைத்து மக்களும் நோய் நொடி இல்லாமல் நலமுடன் இருக்க வேண்டியும் , செல்வ செழிப்புடன் விளங்கிட வேண்டியும் திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் ஜமாத்தார்கள் நல சங்கம் சார்பில் நடத்திய இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த அனைத்து மதத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் .