கோவை கல்லூரி மாணவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன்கேட் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது.

இதற்கு, பாஜக மாவட்ட தலைவர் தாமரை ஜெகதீசன் தலைமை தாங்கினார், மாவட்ட மகளிர் அணி தலைவி லட்சுமி வரவேற்புரை வழங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக மகளிர் அணி பொருளாளர் மாலினி கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழும்பி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில், மாவட்ட மகளிர் அணியின் பொதுச் செயலாளர் மஞ்சுளா, அம்சவல்லி,ஸசுஜாதா, ஜெயலக்ஷ்மி மற்றும் பாஜக நிர்வாகிகள் திரளாக பங்கேற்று பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *