ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட சண்முகையா எம்.எல்.ஏ, இளையராஜா வக்கீல் பாலகுருசுவாமி, காசிவிஸ்வநாதன் உள்பட விருப்பமனு அளித்தவா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நோ்காணல்
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட 46 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.


தமிழகத்தின் 17வது சட்டமன்ற தோ்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் மாா்ச் 30ம் தேதி துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளா்கள் தோ்வில்தீவரம் காட்டி வருகின்றனா். திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவா்களிடம் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பொதுச்செயலாளர் அமைச்சா் துரைமுருகன் பொருளாளா் பாலு, முதன்மை செயலாளர் அமைச்சா் நேரு தலைமை செயலாளா் ஆா் எஸ் பாரதி ஆகியோா் நோ்காணல் நடத்தினாா்கள்.


ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சண்முகையா எம்.எல்.ஏ, ஓன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா, மாநகராட்சி மண்டலத்தலைவரும் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான வக்கீல் பாலகுருசுவாமி, ஓன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், தலைமை செயற்குழு உறுப்பினா் மாடசாமி, பொதுக்குழு உறுப்பினா் இராஜா, முன்னாள் ஓன்றிய குழு தலைவர்கள் ரமேஷ், சுகிா்தா, மாவட்ட ஆதிதிராவிடநல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் மகேஸ்வரன்சிங், மாநகர இளைஞர்அணி துணை அமைப்பாளர் பிரவீன்குமாா், மற்றும் சிவக்குமாா், செல்வப்பெருமாள் செல்வின், அனுராதா, ரவிமுருகன், உள்பட 46 போ் நோ்காணலில் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *