திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 குழந்தைகள் உட்பட 25 நபர்கள் வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதி குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் பேட்டி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சென்னை மதுரை நெல்லை உள்ளிட்ட மாநகரங்களில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு என தனி பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் செய்தியாளர்களிடம் கூறும் போது
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மட்டும் 27 நபர்கள் காய்ச்சல் காரணமாக வெளி நோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர் மேலும்
உள்நோயாளிகள் பிரிவில் 17 குழந்தைகளும் 8 பெரியவர்கள் உட்பட 25 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஒருவருக்கு டெங்கு அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் வீட்டில் இருக்க வைக்க வேண்டும் பள்ளிக்குச் சென்றால் அதன் மூலமாக மற்ற குழந்தைகளுக்கும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது

காய்ச்சல் அதிகரித்து வரும் காரணத்தினால் மருத்துவர்களும் செவிலியர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என வெளி நோயாளிகள் பிரிவு அதேபோன்று காய்ச்சலுக்கு என உள் நோயாளிகளுக்கு தனிப்பிரிவு அவசர சிகிச்சை பிரிவு என காய்ச்சலுக்கு என தனி பிரிவுகள் தொடங்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் செவிலியர்கள் மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *