தென்காசி மாவட்டம் சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப்பள்ளியில் தமிழக கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கலை திருவிழா போட்டியில் பரதநாட்டியம்(தனி) 3-5ஆம்வகுப்பு பிரிவில் மாநிலளவில் 3ஆம் பரிசு பெற்ற மாணவி மாயா நமதி மற்றும் மாவட்ட அளவில் முதல் பரிசும் மாநில அளவில் பங்கேற்ற பரதநாட்டிய குழுக்கள் 1). (3-5) ம்வகுப்பு 2) (6-8)ஆம்வகுப்பு மற்றும் கிராமிய நடனக்குழு (6-8) ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி நிர்வாகி ஜேபஸ் பொன்னையா தலைமை வகித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார் பள்ளிக்குழு தலைவர் செல்வராணி ஜேபஸ் முன்னிலை வகித்தார் தலைமையாசிரியர் மெடி மெனிக்கா வரவேற்றார் ஆசிரியர்கள் பெற்றோர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்