திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் வருகை தந்தார். திருவாரூர் மாவட்டம் வடுவூர், சித்தன்னக்குடி, செறுவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட பகுதிகளை நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
