ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் ராம்குமார், தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொகுதியின் பல்வேறு கிராமங்களிலும் பகுதிகளிலும் அவர் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில், கிராமங்கள் தோறும் வீடு வீடாகச் சென்று மக்களிடம் சந்தித்து பேசும் டாக்டர் ராம்குமார், “முதுகுளத்தூர் தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்படும். விவசாயிகளுக்கு தேவையான பாசன வசதிகள் மேம்படுத்தப்படும். இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் அமைத்து தரப்படும்” என்று வாக்குறுதி அளித்தார்.


நிருபர் ஆர் செந்தில் குமார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *