கும்பகோணம் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் அங்கமான மண்டலம் 3- ன் மண்டல மாநாடு கே ஆர் ஜி பவளம் பேலஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆளுநர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். மண்டலத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.கௌரவ விருந்தினராக பன்னாட்டு இயக்குனர் தேர்வு சீனிவாசன் , சன் டிவி கல்யாண மாலை புகழ் ,சிறப்பு பேச்சாளர் அருண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
தொடர்ந்து முன்னாள் மாவட்ட ஆளுநர் சவுரி ராஜ், மாவட்ட முதல் துணை நிலை ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல்,மாவட்ட இரண்டாம் துணை நிலை ஆளுநர் ஸ்டாலின், ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். நிகழ்வில் முன்னாள் ஆளுநர்கள் வேதநாயகம்,இமயவரப்பன், முகமது ரபிக்,முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் லட்சுமணன், சுப்பிரமணியன்,., ஜார்ஜ் ராய், மனோகரன்,செயலாண்மைக்குழு தலைவர் மவில்வானந்தம், செயலாளர் மோகன் ,பொருளாளர் விஜயா ரமேஷ், உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்