ஏப்ரல் 13
நாமக்கல்.
நாமக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராணி கொண்டி செட்டிபட்டி நான்கு ரோடு, நரிக்குறவர் காலனி, பெரியபட்டி ,SP.புதூர், போன்ற 20 பாயிண்ட்களில் உதயசூரியன் சின்னத்திற்காக பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்பொழுது பொதுமக்களிடையே உரையாற்றும் போது தமிழக முதல்வர் பெண்களுக்காகவே எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உங்களுக்கு 8000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் அனைவருக்கும் வழங்கப்படும் உங்களுக்கு எந்த பொருட்கள் தேவையோ நீங்கள் விரும்பும் கம்பெனி பொருட்களை மகிழ்ச்சியுடன் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் குழுமியிருந்த பொது மக்களிடையே உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எல்லா நபர்களுக்கும் கிடைக்கிறதா விட்டுப்போன நபர்கள் இருந்தால் மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சராகமு க ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அனைவருக்கும் வழங்கப்படும் முதல் நாமக்கல் பெண் வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் நான் களத்தில் நிற்கிறேன் எனக்கு பொதுமக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் நான் வெற்றி பெற்றால் உங்களுடைய கோரிக்கைகளை அனைத்து கோரிக்கைகளையும் நான் நிறைவேற்றி தருவேன் வாக்குறுதி அளித்தார்