பேராவூரணியில் லாரி லோடுமேன் சங்கம் சார்பில் பூத்தொட்டு ஊர்வலம்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் சித்திரை முதல் நாளை கொண்டாடும் வகையில் லாரி லோடுமேன் சங்கம் சார்பில் பல ஆண்டுகலாக பூத்தட்டு எடுத்து பேராவூரணி பிரதான சாலையில் ஊர்வலமாக சென்று அருள்மிகு நீலகண்ட பிள்ளையாருக்கு அபிஷேகம் ஆராதனைசெய்து வழிபட்டு வருகின்றனர்.
அதனைப் போல் இந்த ஆண்டும் பூத்தட்டு ஊர்வலம் அதி சிறப்பாக நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழா ஏற்பாடுகளை பேராவூரணி லாரி லோடுமேன் சங்கத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தியாளர் த.நீலகண்டன்