துறையூர் ஏப்-15
திருச்சி மாவட்டம் துறையூரில் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் திமுக திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் தலைமையில் துறையூர் திருச்சி ரோட்டில் எம்பி அலுவலகம் முன்புறம் இந்திய அரசியல் அமைப்பின் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர்-ன் பிறந்த நாள் விழா 14-04-2026 அன்று கேக் வெட்டி இனிப்பு வழங்கி மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் ஆளுயர திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் லெனின் பிரசாத்,
முன்னாள் ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை,வீரபத்திரன், சிவ சரவணன்,முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சரண்யா மோகன் தாஸ், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ் குமார், வழக்கறிஞர்கள் ஜெயராஜ், தமிழ்செல்வன்,மாவட்ட பிரதிநிதி மதியழகன், மெடிக்கல் பிரேம், நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திக், சுதாகர், நித்யா கிருஷ்ணமூர்த்தி, மோகன்தாஸ் ,புரொபசர் பன்னீர் செல்வம் மற்றும் காங்கிரஸ் நகர தலைவர் இராமநாதன்,வட்டார தலைவர்கள் அரவிந்தன், பிரீஸ் சரவணன், திமுக நிர்வாகிகள் செல்லதுரை,மோகன், நல்லுசாமி, சசிகுமார், வாலீஸ்புரம் கார்த்திக், தமிழரசன் மற்றும் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சரவணன், பிரீஸ் சரவணன், அரவிந்தன்,அஸ்வின் குமார்,ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.