தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை நகலை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து கே எஸ் சரவணகுமார் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்
மேலும் அவர் கூறும் போது தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க அரசு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஆணிவேரையே அறுக்க தூக்கியிருக்கும் ஆயுதம் தான் தொகுதி மறுவரையறை பெரியகுளம் சட்டமன்ற தொகுதி பெரியகுளம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி திமுக நிர்வாகிகள் இல்லத்தில் கருப்பு கொடி கட்டி எதிர்பை தெரிவித்து உள்ளோம் என்றார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தாமரைக் குளம் ச. பால்பாண்டி தென்கரை வே. நாகராஜ் வடுகபட்டி சி நடேசன் உள்பட ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்