கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அதேபோல நேற்று வால்பாறை, மானாம்பள்ளி
அக்காமலை, ஊசிமலை, வெள்ளமலை கீழ்வாழ்பாறை, ஆனைமலை, கிழவன் புதூர்,
மாரப்ப கவுண்டன்புதூர், பெரிய போது, செம்மேடு போன்ற பகுதிகளில் உள்ள வாக்காளர்களை சந்தித்து இயற்கை வளங்களை பாதுகாக்கவும், அனைவருக்கும் சமமான இலவச கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வேட்பாளர் பெ.உமாதேவி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த வாக்கு சேகரிப்பின்போது மாநில ஒருங்கிணைப்பாளர் அ.மேத்யூ, மண்டல செயலாளர் மா. ஜோதிஷ், மாநில தகவல் தொழில்நுட்ப பாசறை துணைச் செயலாளர் சி. கௌதமன், மாவட்டச் செயலாளர் க.வெள்ளிங்கிரி,மாவட்ட செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரன்,கொள்கை பரப்புச் செயலாளர் கோட்டூர் விக்னேஷ்,, பருத்தியூர் செல்வம், ஜெய்கணேஷ்,மாவட்ட பொருளாளர் ஐயப்பன், டே யாபேஸ், தமிழ்வாணன்
சாஸ்தா, ரமேஷ், மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் பரப்புரை நிகழ்வில் கலந்து கொண்டனர்