அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராசுபிள்ளைக்கு ஆதரவாக தென்னந்தோப்பு சின்னத்திற்கு சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் வாக்கு சேகரிப்பு.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள வேட்பாளர்களை சுற்றுப்பயணம் நாளுக்கு நாள் சூடு பிடித்த வண்ணம் இருந்து வருகிறது ஒவ்வொரு வேட்பாளரும் காலை முதல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் ராசுபிள்ளைக்கு ஆதரவாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடி காந்தி சிலை , பந்தலடி ,யானைக்கால் மண்டபம் பகுதிகளில் தென்னந்தோப்பு சின்னத்தில் கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.