மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளிப்பில் சிறந்து விளங்கிய டாக்டர் சந்திரபிரசாத்துக்கு
இரு தேசிய விருது.

பாத்வே அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயற்பாட்டாளர் டாக்டர் சந்திரபிரசாத் சமூக சேவையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக
இரண்டு முக்கியமான தேசிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.


2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு நோபல் பீஸ் அச்சீவ்மெண்ட் விருது வழங்கப்பட்டது. மேலும், கல்வி
மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளிப்புத் துறைகளில் அவர் செய்த குறிப்பிடத்தக்க சேவைக்காக, வழங்கிய பாரதிய பத்ம பூஷண் சம்மான் விருதும் வழங்கப்பட்டது.


டிஎம்சி ட்ரஸ்ட் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநராகவும், தலைமை செயற்பாட்டாளராகவும் பணியாற்றி வரும் டாக்டர் சந்திரபிரசாத் அவர்கள்,
இந்த இரு விருதுகளையும் பெற்றிருப்பது அவரது அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை மற்றும் தலைமைத்திறனின் முக்கியமான அடையாளமாகும் என பாத்வே நிறுவனம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.


இவ் விருதுகள் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்பை முன்னேற்றுவதில் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புகளை அங்கீகரிக்கின்றன. அவரது தலைமையில் டாக்டர் டிஎம்சி ட்ரஸ்ட் தொடர்ந்து உள்ளடக்கிய வாய்ப்புகளை உருவாக்கி, பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருகிறது. பாத்வே குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த பெருமையுடன் டாக்டர் சந்திரபிரசாத் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மேலும், அவரின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறக்கவும், பல்வேறு சாதனைகள் தொடரவும் தங்கள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *