மங்கல தேவி கண்ணகி சித்திரை முழுநிலா விழா கொடியேற்றம்
தமிழகம் கேரளாவை மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா வருகிற மே 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது இந்த விழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி மங்கல தேவி அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது
மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் டாக்டர் எம் ராஜேந்திரன் தலைமையில் துணைத் தலைவர் கே ஆர் ஜெயபாண்டியன் செயலாளர் டி.ராஜகணேசன் பொருளாளர் மி.எஸ்.எம். முருகன் ஆகியோர் முன்னிலையில் பொங்கல் வைத்து அறக்கட்டளை வளாகத்தில் இந்தக் கொடி கம்பத்தில் கண்ணகி கோவில் கொடி ஏற்றப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் எஸ்.பஞ்சுராஜா, ஜி.சரவணன், சி.டி.காசிராஜன், ஆர்.சபரிநாதன்,ஈஸ்வரன்,சுபா தாகர் கருப்பு, சி.எஸ்சேகர் தேனி மாவட்ட சிலம்பாட்ட கழக பொருப்பாளர்கள், ஆர்.பி.முருகேசன் ரத்தினவேல்பாண்டியன், விவசாய சங்க பொருப்பாளர் ரஞ்சித்குமார் மற்றும் கண்ணகி மகளிர் அணி நிர்வாகிகள் பக்தர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்