தஞ்சை சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முரளிதரன்
கமலா சுப்பிரமணியன் மேல்நிலைப்பள்ளி அருகில் புதுக்கோட்டை சாலையில் தொடங்கி , புதிய பேருந்து நிலைய மெயின் ரோடு,ஸ்ரீ சாரதா நகர், திருவேங்கடம் நகர் நீலகிரி ஊராட்சி, ,உள்ளிட்ட பல பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று, வைரம் சின்னத்தை வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநாயககித்து மற்றும் தங்கள் சின்னத்தை விளக்கி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கலைஞர் நகர் நான்காம் தெருவில் வேட்பாளருக்கு தலைப்பாகை அணிவித்துமாலை அணிவித்து மரியாதை செலுத்தி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது தங்களது தொகுதிக்குத் தேவையான திட்டங்கள் மற்றும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பட்டியலுடன் பேசினார்.குறிப்பாக, குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி மற்றும் உள்ளூர் மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காண்பேன் என்றார். இதில் தொகுதி பொறுப்பாளர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.