நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சேகர் அவரது சொந்த ஊரான கோப்பனம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையான வாக்கை செலுத்தினார்.
பின்பு செய்தியாக சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்.
மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர் தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதற்காகவே ஆர்வமாக உள்ளனர் நிச்சயமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று எடப்பாடியார் முதலமைச்சர் ஆவது உறுதியாகிவிட்டது அதேபோல் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி பொறுத்து வரையிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 30000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வருவேன் என தெரிவித்தார்.