திருவொற்றியூர் பெரியார் நகர் அருகே உள்ள நேதாஜி நகர் இரண்டாவது தெருவில் தென்னை மரத்தில் காகம் ஒன்று நூலில் சிக்கி நீண்ட நேரமாக துடித்து வருவதாக அப்பகுதி சேர்ந்தவர்கள் திருவொற்றியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர் முத்துக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் ஏறி காற்றாடி நூலில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்த காகத்தை பத்திரமாக மீட்டு அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்து மீண்டும் பறக்க விட்டனர் பொதுமக்கள் தீயணைப்புத் வீரர்களை பாராட்டினர்.