பெரம்பலூர்.மே.07. பொதுவிநியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொதுவிநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், நொச்சியம் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் (வடக்கு) கிராமத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் அவர்கள் தலைமையிலும், குன்னம் வட்டம், ஒகளுர் (மேற்கு) கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பரிமளம் தலைமையிலும் நடைபெற்றது.
ஆலத்தூர் வட்டம், புஜங்கராயநல்லூர் கிராமத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சுந்தரராமன் தலைமையிலும் 09.05.2026 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்துகொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.