சோழவந்தான் பேட்டை கிராம பகுதியில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.515. செலுத்தி நெல்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளின் நிலங்களில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மண்டல இணை இயக்குனர்.பாலசுப்பிரமணி.தலைமையில் மகசூல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது
நெல் வயலில் 5.க்கு.5 சதுர அடி அளவில் நெல்பயிரை அறுவடை செய்து மகசூல் குறித்து எடை அளவு மேற்கொண்டனர். மேலும் பயிர் காப்பீட்டில் நிர்ணிக்கப்பட்டஇடத்தில் விளைந்த. நெல் எடை அளவு குறைவாக இருந்தாலே முழ காப்பீடு தொகையை விவசாயிகள் பெறலாம் என தெரிவித்தனர்.அப்போது புள்ளியியல்துறை உதவி இயக்குனர் மரகதம்பாள் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் .ஜெயா..வேளாண் உதவி அலுவலர் சந்திரசேகர்.
கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன்.ஆகியோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *