முதுகுளத்தூர் நிருபர் ஆர் செந்தில்குமார்
வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை
முதுகுளத்தூர், மே 26-இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், கிடாத்திருக்கையில் இருந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று முருகப்பெருமானை தரிசிக்க புறப்பட்டனர். முன்னதாக பக்தர்களுக்கு பொதுஅன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நந்தவனத்தில் இருந்து திரு செந்தில்ஆண்டவர் பாதயாத்திரை குழுவினர் அரோகரா கோஷமிட்டு பாதயாத்திரியை தொடங்கினர்.