தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.


தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு நினைவிடத்தில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி, மற்றும் ராஜாபொியசாமி, அசோக்பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் 500 பேருக்கு வேஷ்டி 500 பேருக்கு சேலை, வழங்கினார்கள். பின்னர் நடைபெற்ற அன்னதானத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டு சமபந்தி அன்னதானம் அருந்தினாா்கள்.


By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *