வலங்கைமான்., மே 26

குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேசுவரர் கோவிலில் திரைபட பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம் செய்தார் பின்னர் பொதுமக்கள் அவரிடம் புகைபடம் எடுத்துகொண்டனர்.

அதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்..அப்போது குருபகவனுடைய அருளும் அவருடைய பார்வையும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். ரொம்ப சந்தோஷம் குருவே நமக்கு குருவே நமக கடக ராசி பூசம் நட்சத்திரம் நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லி இருக்காங்க

ஜூன் மாசத்துல இருந்து ரொம்ப நல்லா இருக்கும் என்று சொல்லி இருக்காங்க இருந்தாலும் அந்த நம்ம குருவை பார்த்து வணங்கிட்டு அவரு பார்வை படணும் அதுக்கு தகுந்த மாதிரி நம்மளும் உழைக்கணும் அதுக்காக முயற்சி பண்ணனும்.

இது எல்லாமே குரு அருளால் நல்லதே நடக்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடக ராசி பூசம் நட்சத்திரம் தான் அதே மாதிரி அவருடைய முயற்சி ஒவ்வொரு படங்களையும் வெற்றியை கண்டவர் அதுக்கு தகுந்த மாதிரி இளைஞர் , பெரியவர், தாய்மார்கள், குழந்தைகள் மத்தியில் ஒரு மிகப்பெரிய ஒரு புகழுடைய உச்ச நடிகராக இருந்து அதே மாதிரி அவர் எப்படி படத்துல உச்ச நடிகராக வந்து தமிழகத்தினுடைய முதலமைச்சராகவும் ஒரு சிறப்பா வந்து விளங்கிகிட்டு இருக்காரு

அது வந்து ரொம்ப பெருமையா இருக்கு ரொம்ப சந்தோஷமா நான் சினிமா நடிகராக ஆயிரம் படத்தில் பாடியுள்ளேன். ஒரு படம் ரெண்டு படம் பாடுவோம் அதுக்கு மேல பெருசா அப்படின்னு நினைச்சேன் ஆனா இன்னைக்கு வரைக்கும் பராசக்தி படம் வரைக்கும் இப்ப வந்த லேட்டஸ்ட் வரவுள்ள படங்கள் சுப்பிரமணியபுரம் இறைவன் நம்பிக்கை இருப்பதனால் நல்லதே நடந்து கொண்டு இருக்கிறது.

நான் சில தேசிய , மக்களிசை , கலைமாமணி உள்ளிட்ட விருதுகள் வாங்குவேனு நினைத்து கூட பார்த்து இல்ல எனக்கு கிடைத்து இருக்கிறது. அதைபோல அரசியலில் வருவதற்கு கடவுள் வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக வருவேன்.

தமிழக வெற்றி கழகம் முன்றாம் ஆண்டு துவக்க விழாவில் என்னை பாடுவதற்கு அழைத்தார்கள் அப்போபது அவர்கள் முருகரை பற்றி பாடச் சொன்னார்கள் வருவாய் தளபதியே வெற்றி வாகை சூடுவார் என பாடினேன்

தமிழக வெற்றி கழக ஆட்சியில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் நடைபெற்று வருகிறது என கேட்டதற்கு எல்லோரும் ஆறு மாதம் வரை பார்ப்போம் அப்புறம் பார்த்துகளாம் என சொன்னார்கள் தமிழகத்தை எத்தனையோ பேர் ஆண்டார்கள் அப்போது எந்த பிரச்சனையும் நடக்கவில்லையா?அப்போது நிறைய குற்ற சம்பவங்களை பார்த்துள்ளோம்.

இப்பதான் ஆட்சிக்கு வந்து இருக்காரு எல்லாத்தையும் கண்டிப்பாக சரி பன்னுவார் எல்லோருக்கு பிடித்தவராக முதல்வர் விஜய் இருப்பார் குழந்தைகளுக்கு இன்னைக்கு பிடிச்சு போய் குழந்தைகள் வந்து இன்னைக்கு தன்னுடைய தாய் தந்தைககிட்ட சத்தியம் வாங்கி ஓட்டு போட வைத்தார்கள் என தெரிவித்தார் பின்னர் குருபகவான் பாடல் பாடினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *