கோவை மாவட்டம் வால்பாறை பெரிய கருமலை முன்னாள் மாணவர்கள் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஆழியார் அறிவு திருக்கோவில் அருக்கில் உள்ள ஜெ.சி. கார்டெனில், வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில், முன்னாள் மாணவர்கள், குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், விழாவில் முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்கள, சொற்பொழிவு, சிறப்பு விருந்தினர்கள் உரை, பரதநாட்டியம்,யோகாசனம், பாடல் கச்சேரி, நடனம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஆசிரியர் பெருமக்கள், தொழிலதிபர்கள், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கலந்து கொண்டனர், விழா ஏற்பாடுகளை சங்க தலைவர் சக்தி, செயலாளர் வேல்பாண்டி, துணைத் தலைவர் லட்சுமணன், செயலாளர் முருகையா, பொருளாளர் ஆர்த்தி பிரகாஷ், செயற்குழு உறுப்பினர் வன்னிய ராஜ் ஆகியோர் செய்திருந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்