கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய .ரவிச்சந்திரன் குதந்தை லயன் பாலசுப்ரமணியன் நினைவாக ஸ்ரீ சந்தோஷ் ஜுவல்லரி மற்றும்
சேதுமாதவன் (LTS) தந்தை . ராதா நினைவாக,லயன் அசோகன்
ஆகியோரின் குடும்பத்தினர் நிதி உதவியுடன் கண் சிகிச்சை முகாம் சரஸ்வதி பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
முகாமை சங்கத் தலைவர் லயன் கே எஸ் பாலசுப்ரமணியன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.வட்டார தலைவர் லயன் ..பாலகிருஷ்ணன்,செயலாளர் லயன் ராஜாராமன்,பொருளாளர் லயன். ஜோதிராம், திட்ட செயலாளர் லயன்.சங்கர் மற்றும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தார்கள்.
அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று பொது மக்களின் கண்களை பரிசோதித்தனா். நகரப்புற ,கிராமப்புற பொது மக்கள் என 369 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 225 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு இன்று மதுரைக்கு 114 நபர்கள் இரண்டு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து பேருந்து கட்டணம் உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.மீதமுள்ள 111 நபர்கள் செவ்வாய் கிழமை காலை மதுரைக்கு செல்ல இருக்கின்றனர்
ஏற்கனவே இரண்டு கண்களும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 32 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப் பட்டது.மேலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து 27 நபர்களுக்கு குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை சங்க பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்