திருவெற்றியூர். ஜூன். 7
எண்ணூர் தீயணைப்பு நிலையத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணமாக பொதுமக்களுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு மீட்பு குழுவினர்.
வாங்க கற்றுக் கொள்வோம் தீயணைப்பு குறித்து அறிவோம் உயிர்களை காப்போம் என்ற வாசகங்கள் பொருந்திய பதாகைகளுடன் சாலையில் இருசக்கர வாகனம் மாநகர பேருந்து ஆட்டோ உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய எண்ணூர் தீயணைப்பு துறையினர்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் எண்ணூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையில் தீ அனைத்து மற்றும் மீட்பு வீரர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் சார்பில் வாங்க கற்றுக் கொள்வோம் தீயணைப்பு குறித்து அறிவோம் உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் ஜூன் 6-ம் தேதி மற்றும் 7 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் வெயில் காலங்களில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எப்படி பாதுகாப்பாக வைப்பது அவசர காலங்களில் தப்பித்துச் செல்லும் வழிமுறைகள் தீயின் வகைகள் தீ பற்றி எரிந்தால் தீ அணைப்பான்களை எப்படி பயன்படுத்துவது எல்பிஜி தீ பாதுகாப்பு எல்பிஜி தீ கசிவு ஏற்பட்டால் தடுக்கும் முறைகள் வாகனங்களில் தீ விபத்து ஏற்படும் காரணங்கள் வாகன தீ விபத்தின் போது செயல்படும் முறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கும் வழங்கி அவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் தீயணைப்பு வீரர்கள் சார்பில் எண்ணூர் சாலையில் பயணம் செய்யும் ஆட�