தருமபுரியில் சர்வதேச உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ். சுரேஷ் கண்ணன் பிறந்தநாள் விழா – அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
தருமபுரியில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர், மூதறினர் சட்டக் கல்லூரி பேராசிரியர் Dr. S. சுரேஷ் கண்ணன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் அம்பேத்கர் மாநில அமைப்பாளர், மதியழகன் மாநில ஒருங்கிணைப்பாளர், மணிக்குமார் மாவட்டத் தலைவர், மனோகரன் மாவட்டத் துணைத் தலைவர்,, முருகன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சிவகுமார் மாவட்ட பொருளாளர், குமார் மாவட்ட அமைப்பாளர், தமிழரசன் மாவட்ட இளைஞரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மேலும், அனைவரும் இணைந்து சமூக நலன் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு பணிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துகளை தெரிவித்து, விழாவை மனநிறைவுடன் கொண்டாடினர்.