தூத்துக்குடி தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் குழந்தை பாண்டி, மாவட்ட செயலாளர் வெயிலாட்சி, மாநகர தலைவர் சக்தி செல்வன், மாவட்ட துணை செயலாளர் அருண்குமார், மாநகர துணை செயலாளர்கள் முருகேசன், உமையலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கமர்தீன் பாய், செயற்குழு உறுப்பினர் சத்யா மற்றும் கட்சியினர் சுமார் 50 பேர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் கலைஞா் அரங்கில் திமுக வில் இணைந்தனா். 

அனைவரையும் கீதாஜீவன் சால்வை அணிவித்து வேஷ்டி சேலை வழங்கி கௌரவித்து திமுகவில் இணைந்ததற்கு வாழ்த்தி வரவேற்று வரும் காலத்தில் தங்களது பகுதியில் திமுக ஆட்சியில்நடைபெற்ற திட்டங்களையும் ஸ்டாலின் சாதனைகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறி திமுகவின் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.


நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபா் விஜயராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *