தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் காசிலிங்கம்பாளையம் கிராம மக்களின் பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்.
குண்டடம்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே காசிலிங்கம்பாளையம் கிராமம் நாவிதன்புத்தூர் ஊர் கூலி தொழிலாளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் 25 நபர்கள் காசிலிங்கம்பாளையம் கிராமம் புல எண் : 995 ல் 8.5 சென்ட் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றி மேற்படி ஊரை சார்ந்த 10 நபர்களுக்கு பட்டவழங்க கோரியும் கொக்கம்பாளையம் கிராமம் புல எண் 421 – ல் 15 நபர்களுக்கு பட்ட வழங்ககோரியும் குண்டடம் உள் வட்டம் வருவாய் நில ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று நில ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்கள் நீங்கள் கொடுத்தாமனு மேல் அதிகாரிகளிடம் பரிசீலனையில் உள்ளது அவர்களிடமிருந்து ஆணை வந்தவுடன் சரியான தக்க நடவடிக்கைளை மேட்கொள்வோம் மற்றும் பரிசீலிக்கப்பட்டு தகுதிவாய்ந்த பட்டதற்கு பட்ட வழங்கப்படும் என வாக்குறுதியளித்தார் பின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெற்று பொதுமக்கள் கழைத்துச்சென்றனர்.
திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதனால் குண்டடம் பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.