கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்கள் மனம் மற்றும் உடல் நலம் கருதி யோகா பயிற்சி முறைகள் மற்றும் ஆலோசனை கூட்டம், ஹோட்டல் டைமண்ட் மினி மஹால் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் முகவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.
ஜூன் மாதம் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஹார்ட் புல்னெஸ் குழுவினர் வழங்கிய பயிற்சியாளர்கள் திருமதி குணசுந்தரி ,சிவகுருநாதன் ஆகியோர் மூச்சு பயிற்சி,முத்திரை பயிற்சி, ஆசணம் மற்றும் rஓய்வு பயிற்சிகள் பற்றி மிகத் தெளிவாக
விளக்கத்தை வழங்கினர்.
தொடர்ந்து திருச்சி மண்டல மேலாளர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது வணிக இலக்குகளை எட்டவும், புதிய காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், விற்பனைத் திறனை மேம்படுத்தவும் மிகவும் அவசியமானது மற்றும்
புதிய ஹெல்த் பாலிசிகள் விதிமுறைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மண்டல பயிற்சியாளர் மனோஜ் குமார் அவர்கள் நிறுவனத்தின் வணிக போட்டியினை எவ்வாறு வெற்றி பெறுவது என்ற உக்திகளை எடுத்துரைத்தார்.
.நிறைவில் கும்பகோணம் பிரிவு மேலாளர் .நவீன் அவர்கள் நன்றி கூறினார்.