தவெக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் தலைமையில் மேற்கு மாவட்டம் முழுவதும் நீர்–மோர் பந்தல்கள் திறப்பு

பரமக்குடி ஜூன் 10
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, பகல் நேரங்களில் பொதுமக்கள் கடும் வெப்பத்தை எதிர்கொண்டு வருகின்றனர். சாலைகளில் பயணம் செய்பவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வெயிலால் அவதியடையும் சூழல் நிலவி வருகிறது.


இதனை கருத்தில் கொண்டு, தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் தலைமையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்–மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்–மோர் பந்தல்களில் குளிர்ந்த குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட்டு வருகிறது.


பேருந்து நிலையங்கள், சந்தை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இப்பந்தல்களை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பயணிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் மற்றும் முதியவர்கள் இந்த சேவையை வரவேற்று பயன்பெற்று வருகின்றனர்.
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த மக்கள் சேவை நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கோடை காலம் முழுவதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *