உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சியில் குடிநீர் வினியோகம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆய்வு
தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கோம்பை பண்ணைப் புரம் தேவாரம் ஆகிய பேரூராட்சிகளின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மெயின் பராமரிப்புப் பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டதால் கடந்த பத்து நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது
பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்ட பின்பு கூடலூர் காவல் நிலையம் கம்பம் அப்பாச்சி பண்ணை யுவராஜா தியேட்டர் முன்பு ஆகிய இடங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்புகள் உடனடியாக சரி செய்யப்பட்டு கோம்பை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் காலதாமதமின்றி சீரான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதை கோம்பை பேரூராட்சி செயல் அலுவலர் இரா. சுருளி வேலு ஆய்வு செய்தார்.