மன்னார்குடி., ஜூன்.20

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில்
திருவாரூர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நீலன் அசோகன் அறிவுறுத்தலின் பேரில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியில் படிக்கும் மாணவ ,மாணவியர்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் நோட், பென்சில் , பேனா, புத்தகம் உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தலைமை
எஸ் சஞ்சய் காங்கிரஸ் கிராம கமிட்டி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மன்னார்குடி வட்டார காங்கிரஸ் கமிட்டி டி.பி.டி செந்தில் மாநில செயலாளர் சமூக ஊடகத்துறை,
முன்னிலை வி.எம் கலியபெருமாள் மாவட்ட
துணைத்தலைவர், மாவட்டப்பொதுச்
செயலாளர் முனைவர். அய்யா பிள்ளை, மாவட்ட செயற்குழு டி.எஸ்.ஜே சுரேஷ், இந்நிகழ்ச்சி அன்பளிப்பு பரவக்கோட்டை வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் SS.செல்வராஜ், மன்னார்குடி வேர்ஸ்டன் தொடக்க பள்ளி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர் பாலசுப்ரமணியன்,

மற்றும் பொண்ணு ஜெயபால் , ராஜ் பால், P. சிவகுமார், சுந்தரகோட்டை பாலு, லோகேஷ், தீரன், அருண் அழகேசன் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *