புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, ஏனாம் கொள்ள பள்ளிச்சேர்ந்த எம்எல்ஏ சீனிவாச அசோக் தரக்குறைவாக, இழிவாக பேசியதைதொடர்ந்து கொதிப்படைந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதில்அரியாங்குப்பத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஸ்கர் தலைமையில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து மாதா கோவில் வழியாக கண்டன கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். அதைத் தொடர்ந்து கோட்டைமேடு சிக்னல் புறவழிசாலை சந்திப்பு அருகே சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் கைது இந்த சாலை மறியலால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. உருவப்படம் மற்றும் உருவபொம்மை எரிக்கப்பட்டது. மேலும் உருவப் பொம்மையை செருப்பாலும் அடித்து தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பாஸ்கர் எம்.எல்.ஏ. உள்பட 100 பேரை அரியாங்குப்பம் போலீசார் கைது செய்தனர். முன்னதாக எம்எல்ஏ சீனிவாச அசோக் மீது அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முத்துகுமரனிடம் பாஸ்கர் எம்எல்ஏ புகார் அளித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *