நீடாமங்கலம்., ஜூலை., 08
திருவாரூர் அருகே நீடாமங்கலத்தில் உள்ள திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்தும் , மத்திய அரசின் மாணவர்களின் விரோத நீட் தேர்வு குளறுபடிகளை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் திருவாரூர் மாவட்டத் தலைவர் நீலன் அசோகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் , கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் நீலன் அசோகன் தெரிவித்ததாவது . அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இளம் தலைவர் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் முக்கியமான பிரச்சனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல நாங்கள் பயணித்து வருகிறோம்.
நீட் தேர்வில் நடைபெற்ற பல்வேறு குளறுபடிகளை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச்சென்று அதில் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் , பெற்றோர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துச் சொல்லி நீட் தேர்வு மூலம் ஊழல் நடைபெற்று இருப்பதை மக்களிடம் காங்கிரஸ் கட்சியினர் தெளிவுபடுத்த வேண்டும்.
பிஜேபி தலைமையிலான மத்திய அரசு வந்த பிறகு நீட் தேர்வு அறிமுகப்படுத்தி மாணவர்கள் இடையே திறமையை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ வாய்ப்பு அளிக்க வேண்டும் என தேர்வு முறை கொண்டு வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வில் குளறுபடிகள் ஊழல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
என்ன நோக்கத்திற்காக நீட் கொண்டுவரப்பட்டதோ அதன் நோக்கம் அசைகின்ற போக்கில் செயல்பாடுகள் அமைந்துள்ளது , நீட் தேர்வு மிகப்பெரிய பிரச்சினை கிளப்பி இருக்கிறது , கிட்டத்தட்ட 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
நீட்தேர்வில் வினாத்தாள் கசிவு, குளறுபடிகள் செய்து மாணவர்கள் எதிர்கால மருத்துவராகும் கனவைசிதைத்து மத்தியில் ஆளும் மோடி , கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் அவர்களை சாரும் , இரவு ,பகல் பாராமல் படித்த மாணவர்களுக்கு இந்த அரசு ஏமாற்றம். மன உளைச்சலை தான் தந்துள்ளது 15 மாநிலங்களில் வினாத்தாள் கசிந்துள்ளது. கசிந்த வினாத்தாளை ஒருசில வசதிபடைத்த மாணவர்களுக்கு ஒருநாள் இரவு முழுவதும் படிக்கவைத்து தேர்வை எழுத செய்துள்ளனர்.
நீட் தேர்வு பணம் படைத்தவர்களுக்கும், பொருளாதார மேல்தட்டில் உள்ள மக்களுக்கு பயன்படக்கூடிய கல்வியாக மாறி உள்ளது. கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள், நடுத்தர மாணவர்கள் மருத்துவர் ஆகும் கனவை சிதைத்துள்ளது.
பல்லாயிரம் கோடி சம்பாதிக்கும் தொழிலாக நீட் தேர்வு பயிற்சி முகாம் நடந்து கொண்டுள்ளது நீட் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்ற வருகிறது. இந்த ஊழலின் மூலமாக நம் எதிர்கால இந்தியாவின் கல்வி கட்டமைப்பு சீரழிந்து இருக்கிறது.
இந்த அரசிற்கு பொதுதேர்வு எப்படி நடத்தவேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த நீட் தேர்வு இல்லாமல் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்து இருக்கின்றார்.
மத்தியில் ஆளும் மோடி செய்து வருவதை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தி அவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் மிக வன்மையாக கண்டித்து வருகின்றார்கள். முதல் கட்டமாக பத்திரிக்கையாளர்கள் மூலம் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது.
இரண்டாவதாக நீட்தேர்வு பொறுப்பான அமைச்சர்களான மோடி அவர்களும், தர்மேந்திர பிரதான் அவர்களும் பதவி விலக வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் வட்டார, நகர அளவில் நடத்துவது என்றும் , அந்தந்த பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் மூலம் வெளிப்படுத்துவது மாணவர்களின் குரல் என்ற தலைப்பில் இந்தியாமுழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயல்படுத்திக்கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
முன்னிலை மாவட்ட துணை தலைவர் என்.ஆர் பாலகிருஷ்ணன் , சத்தியமூர்த்தி , TPT செந்தில் மாநில செயலாளர். சமூக ஊடகத்துறை, நகரத் தலைவர் C.கோவிந்தராஜ், இளைஞர் காங்கிரஸ் மன்னை வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நிகழ்வில் மாவட்ட செயலாளர் சுதந்திர தேவி, கே எஸ் ராஜபாண்டியன், மாவட்டத் துணைத் தலைவர் மணி, நீடா மங்கலம் மாவட்ட சிறுபான்மை பிரிவு ரஹமத்துல்லா , துரை , நகர செயலாளர் ஆதித்யன், சித்திரவேல் அசோகன் தாஸ் ,கிருஷ்ணமூர்த்தி , ஓபிசி மாநில செயலாளர் சங்கர், சாமிக்கண்ணு , முத்தையன், கார்த்தி, சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்