பெரியகுளம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய நகராட்சி ஆணையாளருடன் மாவட்ட கலெக்டர் ஆய்வு
தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்ப் பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் வகையில் சுற்றுச்சூழலை அமைப்பதற்கான தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி ஆணையாளர் தமிஹா சுல்தானா மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் ஆலோசனை மேற்கொண்டார் இந்த ஆய்வில் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் நகராட்சி ஆணையாளர் தமிஹா சுல்தானா உதவி இயக்குனர் ஊராட்சிகள் உம்முல் ஜாமியா தாசில்தார் பெரியகுளம் மருதுபாண்டி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்