தேனியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தினம் 2026- ஜ முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. முத்துசித்ரா கேடயங்கள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். முன்னதாக உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு. அன்புச் செழியன் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு செவிலியர் பயிற்சி மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.