திருவாரூரில் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சிறப்பு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணி குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சிறப்பு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணி குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய்ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர தீர்த்த பணிகளுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும், அரசு விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொள்ள நிர்பந்தம் செய்யக்கூடாது, ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *