கோவை, ஜூலை 28:

இந்திய மருத்துவச் சங்கம் (ஐ.எம்.ஏ.) கோவை கிளை சார்பில் மருத்துவர்கள் தின விழா கோவை ஐ.எம்.ஏ. அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு இந்திய மருத்துவச் சங்கத்தின் கோவை கிளைத் தலைவர் டாக்டர் பி. கோஷல் ராம் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். கவுரவச் செயலாளர் டாக்டர் டி. பரமேஸ்வரன் ஆண்டறிக்கையை வாசித்தார்.

விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான வி. சம்பத்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி சிறப்புரையாற்றினார்.

மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக ஐ.எம்.ஏ. தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் டாக்டர் ஏ.கே. ரவிகுமார், மேற்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் சி.பி. சண்முகசுந்தரம் மற்றும் முன்னாள் மாநிலச் செயலாளர் டாக்டர் எஸ். கார்த்திக் பிரபு ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

விழாவின் தொடக்கமாக ஐ.எம்.ஏ. கோவை நுண்கலைக் குழுவினரின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பிரார்த்தனைப் பாடல், மருத்துவர்கள் உறுதிமொழி ஏற்றல் மற்றும் கொடி ஏந்தி மரியாதை செலுத்துதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பாராட்டும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் வி. சம்பத்குமார் 56 மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவில் நிதிச் செயலாளர் டாக்டர் ஆர். பாலமுருகன் நன்றியுரை ஆற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed